என் எண்ணங்களை சொன்னேன்... செவிசாய்க்கவில்லை
என் சிந்தனைகளை பார்த்து... பொறாமைபட்டனர்
என் ஆசைகளை தெரிவித்தேன்.. நடைமுறையில்
சாத்தியமில்லை என்றனர்
அவர்களின் செயல்களை விமர்சித்தேன்... தலைகனம்
என்றனர்
தவறுகளை சுட்டிக்காட்டினேன்... ஆணவம் என்றனர்
அவர்கள் இயலாமையை வெளிப்படுதினேன்... துணிவை
விமர்சித்தனர்
கட்டுபாடுகளை புகுத்தினேன்.... வதந்திகளை
பரப்பினர்
முனைப்போடு செயல்பட்டேன்... ஓரம்கட்ட முனைந்தனர்
ஒருவரும் உணரவில்லை... என் எண்ணவோட்டம்
என்ன்னவென்று..
என்று புரியும் உங்களுக்கு...?? என்னை பற்றிய
உங்கள் புரிதல் தவறென்று..
எனக்கிருப்பதோ பாரதி சொன்ன ஞானசெறுக்கு....!!!!