அஞ்சலி
என்னைவிட்டுவிட்டு
நீர்குவளையை கொண்டு சென்றவள்...
இரண்டாம் சந்திப்பில்
நீர்குவளையை விட்டுவிட்டு
என்னை கொண்டு சென்றாள்...
தாகத்தில் தண்ணீருக்கு தவிப்போம்
இன்று தண்ணீரே தவிக்கிறது
தன்னை விட்டதை எண்ணி
நீர்குவளை தன்னைதானே நொந்தது
தாகத்தை தாபம் வென்றதை அறியால்...!!!