நரியே நரியே...
ஒழுங்கீனம் ஒழுக்கமென்றும்,
போலியான பாசாங்குக்கும்,
வேடதாரி தலைவனென்று,
கையாலாகாதவன் தொண்டுராக
பின் செல்லும் காலமிது.
நேர்மை தனை குழிதோண்டி
புதைத்துவிட்டு புத்தனைப்போல்
யாருக்கும் உண்மையின்றி
சமூகத்தில் வலம் வந்து,
வாழ்வதனில் உன் கடமை
ஆற்றகூட வழியின்றி,
செய்திட்ட பாவத்தின்
பயனாக படுகின்றாய்.
இன்னும் ஏன் உனக்கு
மற்றவரின் பொல்லாப்பு,
உன் பிரித்தாளும் சூழ்ச்சியினை
புரியாத பித்தர்களா,
புரித்தும் நன்கறிந்தும்
உனை ஏய்க்கும் சகுனிகளா.
நீ அவனை மூடனென்றும்
அவன் உன்னை மூடனென்றும்,
மாறி மாறி ஏய்க்கின்றீர்
மனதுக்குள் மகிழ்கின்றீர்.
காலம் உம்மை வெளிகாட்டும்
வெட்கங்கெட்ட மானிடரே..
மற்றவனை மகிழ்விக்க
நீ செய்யும் சலசலப்பை,
கண்டு அஞ்சி சலனமாக
உன்னைப்போல் நான் நரியில்லை.
ஏமாற்றும் உன் போக்கை
என்றோ உணர்ந்த சிங்கமடா,
நினைவாற்றலில் என்றுமே
உந்து மத களிறுயடா
மூடனென எனை நினைத்தால்
காலன் உனை கவர்வதற்குள்,
காலம் உனக்கு பதிலளிக்கும்
செய்த பாவம் உனை மிரட்டும்.
நான் மற்றவரை முன்னேற்றி
முடிந்தவரை மகிழ்வித்து,
மகிழ்ச்சியுறும் மனம்கொண்ட
மாசற்ற மனிதனடா...!!!