பிரிவு, சுகம், துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி, துரோகம், அவமரியாதை, ஏளனம், சூழ்ச்சி, உபச்சாரம், மரணம்....
அனைத்தும் அனைவர்க்கும் பழகிவிடும்...
குறை கண்டு உளம் குமுறாது
நிறைகண்டு மகிழ பழகினோம்..
நிதானத்தை இழந்தபோதும்
நிகழ்வுகளை கண்டு அஞ்சினோம்..
நமக்காக வாழாது
பிறர்க்காக நடித்தோம்...
நடப்பவற்றை உணராது
நடைபிணங்களாய் வலம் வந்தோம்....
மறத்துப்போன மானிடராயிற்றே...!!!
பாதிக்காதது மறந்துபோகும்
மற்றவை நம்மோடு மடிந்துபோகும்....!!!!!
No comments:
Post a Comment