Wednesday, 22 November 2023

அம்மா

என்....

நான்காம் வயதில்
மரத்தை சுற்றி ஓடிய கால்கள்
களைத்து உணவை நாடி வருகையில்
ஊட்டி வளர்த்து உள்ளம் மகிழ்ந்தாய்...

பதினான்காம் வயதில்
அறியாத ஊரில் அனாதையாய் எண்ணி
நாள்தோறும் நான் கலங்க
வாழ்வை நெறிபடுத்தினாய், வலிபாராமல்...

இருபத்திநான்கில்
இந்த இல்லத்தின் புதிய வரவானவளை
வாயாற வாழ்த்தி உளமாற வரவேற்று
உன் அன்பை பகிர்ந்தாய் பதட்டமில்லாமல்...

முப்பத்து நான்கில்
முத்து முத்தாய் இரண்டு மழலைகளை
முத்தாய்ப்பு செய்து உச்சி முகர்ந்தாய்
பசி தூக்கம் அறிந்து முகம்வாட விடாமல்....

நாற்பதை தொடும் முன்பே
நாதியற்று போனதுபோல்
உன் மரணம் என்னை பீதியேற்ற
உணர்ந்தேன் நீயில்லா வெறுமையை....

நான்காண்டுகள் உருண்டனவே
நாள்தோறும் உன் நினைவில்
எனையாட்கொண்ட வெறுமையை
வெல்லும் முயற்சி தோல்வியில்
வெற்றிடத்தை நிரப்பிவைக்க
அன்னையைப்போல் யாருளர்...!!!

No comments:

Post a Comment