Wednesday, 17 August 2016

தீர்த்த கரையினிலே....

நதியாக ஓடிய நீ இடையில்
தடம் மாறி வரண்டு போனாய்
நம்பிக்கை இழந்த நிலையில் மீண்டும்
மடைதிறந்த வெள்ளமாய் வந்தாய்

உறவுகளை ஒதுக்கிய நீ
உள்ளக் கதவுகளை மூடவில்லை
பூக்க மறுத்த பூச்செடியே உனக்கு
பூச்சி மருந்து என் வார்த்தைளோ?

'கிளி' யொன்று தன்னைத்தானே
சிறைகொண்ட வினோதம் நீ
காலம் கடந்த முயற்சியாயினும்
பரோலில் வெளிவந்த அன்னம் நீ

சொர்கத்தில் நிச்சயித்ததை
நரகமென சித்தரித்தாய்
கோட்பாடுகளை உடைத்தெறிந்து
நீ வாழ யத்தனித்தாய்

வெள்ளம் அஞ்ச வைத்தாலும்
உள்ள(ம்) நீர் பஞ்சம் போனதடி
சிறைவாசம் நீ துறக்க எங்கும்
பூவாசம் மயக்குதடி..

No comments:

Post a Comment