நதியாக ஓடிய நீ இடையில்
தடம் மாறி வரண்டு போனாய்
நம்பிக்கை இழந்த நிலையில் மீண்டும்
மடைதிறந்த வெள்ளமாய் வந்தாய்
உறவுகளை ஒதுக்கிய நீ
உள்ளக் கதவுகளை மூடவில்லை
பூக்க மறுத்த பூச்செடியே உனக்கு
பூச்சி மருந்து என் வார்த்தைளோ?
'கிளி' யொன்று தன்னைத்தானே
சிறைகொண்ட வினோதம் நீ
காலம் கடந்த முயற்சியாயினும்
பரோலில் வெளிவந்த அன்னம் நீ
மூன்றாம் பிறையாய் வந்தவளே நீ பௌர்ணமியாகும் வரை அடைகாப்பேன்,
ஒரு நாளும் உனை மறவாஉயர்வான நிலை கேட்பேன்.
சொர்க்கத்தில் நிச்சயித்ததை நரகமென நீ துறந்தாய்,
முன் ஜென்ம மிச்சத்தை நீ வாழ யத்தனித்தாய்.
சிறைவாசம் நீ துறக்க எங்கும் பூவாசம் மயக்குதடி,
என்னருகில் நீ இருந்தால்என் சுவாசம் நிலைக்குமடி.
உன் முகத்தழகை முன்னிறுத்தி முடிவெடுக்கும் மூடனல்ல,
அகத்தழகு முகத்தழகாய் மிளிரும் வரை ஓய்வில்லை.
தயங்காதே செல்லமே உன்னைத் தனிமையில் விடமாட்டேன்,
உன் தேவை நான் அறிந்து உயிர் கொடுத்துக் காத்து நிற்பேன்...!!!
No comments:
Post a Comment