Wednesday, 22 November 2023
திருச்சியும் திரையிசையும்
நீ.....
நீ....
மூன்றில் குழந்தையாய்....
இருபதில் தோழியாய்...
முப்பதில் மௌனியாய்....
நாற்பதில் நறுமுகையாய்...
இனி
ஐம்பதையும் அறுபதையும்
ஆவலுடன் எதிர்நோக்கி நான்...
மீண்டும் மீண்டும் வா...!!!
அம்மா
என்....
நான்காம் வயதில்
மரத்தை சுற்றி ஓடிய கால்கள்
களைத்து உணவை நாடி வருகையில்
ஊட்டி வளர்த்து உள்ளம் மகிழ்ந்தாய்...
பதினான்காம் வயதில்
அறியாத ஊரில் அனாதையாய் எண்ணி
நாள்தோறும் நான் கலங்க
வாழ்வை நெறிபடுத்தினாய், வலிபாராமல்...
இருபத்திநான்கில்
இந்த இல்லத்தின் புதிய வரவானவளை
வாயாற வாழ்த்தி உளமாற வரவேற்று
உன் அன்பை பகிர்ந்தாய் பதட்டமில்லாமல்...
முப்பத்து நான்கில்
முத்து முத்தாய் இரண்டு மழலைகளை
முத்தாய்ப்பு செய்து உச்சி முகர்ந்தாய்
பசி தூக்கம் அறிந்து முகம்வாட விடாமல்....
நாற்பதை தொடும் முன்பே
நாதியற்று போனதுபோல்
உன் மரணம் என்னை பீதியேற்ற
உணர்ந்தேன் நீயில்லா வெறுமையை....
நான்காண்டுகள் உருண்டனவே
நாள்தோறும் உன் நினைவில்
எனையாட்கொண்ட வெறுமையை
வெல்லும் முயற்சி தோல்வியில்
வெற்றிடத்தை நிரப்பிவைக்க
அன்னையைப்போல் யாருளர்...!!!
இசைஞானி....
அரும்புகளாய் தவழ்ந்தபோது
அவ்வையின் ஆத்திச்சூடி
அரும்புமீசை காலத்தில்
உன் இசையே என் உயிர்நாடி
"உன்னோடு ஐவரானோம்"
என்றான் இராமன் தன் காலத்தில்..
நாங்களோ உன்னோடு
ஐவராக்கினோம்.... ஆம்..
மாதா..
பிதா..
குரு..
தெய்வம்...
ஐந்தாவதாக...இசைஞானி.....!!!!
பாலு....
Saturday, 25 January 2020
எரித்துவிடுங்கள் என் சிதையை...!!!
Saturday, 27 July 2019
நரியே நரியே
நரியே நரியே...
ஒழுங்கீனம் ஒழுக்கமென்றும்,
போலியான பாசாங்குக்கும்,
வேடதாரி தலைவனென்று,
கையாலாகாதவன் தொண்டுராக
பின் செல்லும் காலமிது.
நேர்மை தனை குழிதோண்டி
புதைத்துவிட்டு புத்தனைப்போல்
யாருக்கும் உண்மையின்றி
சமூகத்தில் வலம் வந்து,
வாழ்வதனில் உன் கடமை
ஆற்றகூட வழியின்றி,
செய்திட்ட பாவத்தின்
பயனாக படுகின்றாய்.
இன்னும் ஏன் உனக்கு
மற்றவரின் பொல்லாப்பு,
உன் பிரித்தாளும் சூழ்ச்சியினை
புரியாத பித்தர்களா,
புரித்தும் நன்கறிந்தும்
உனை ஏய்க்கும் சகுனிகளா.
நீ அவனை மூடனென்றும்
அவன் உன்னை மூடனென்றும்,
மாறி மாறி ஏய்க்கின்றீர்
மனதுக்குள் மகிழ்கின்றீர்.
காலம் உம்மை வெளிகாட்டும்
வெட்கங்கெட்ட மானிடரே..
மற்றவனை மகிழ்விக்க
நீ செய்யும் சலசலப்பை,
கண்டு அஞ்சி சலனமாக
உன்னைப்போல் நான் நரியில்லை.
ஏமாற்றும் உன் போக்கை
என்றோ உணர்ந்த சிங்கமடா,
நினைவாற்றலில் என்றுமே
உந்து மத களிறுயடா
மூடனென எனை நினைத்தால்
காலன் உனை கவர்வதற்குள்,
காலம் உனக்கு பதிலளிக்கும்
செய்த பாவம் உனை மிரட்டும்.
நான் மற்றவரை முன்னேற்றி
முடிந்தவரை மகிழ்வித்து,
மகிழ்ச்சியுறும் மனம்கொண்ட
மாசற்ற மனிதனடா...!!!